search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெலமங்கலம் அருகே  கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு
    X

    வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    கெலமங்கலம் அருகே கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

    • கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு செய்து சீர்வரிசை வழங்கினார்.
    • பிரசவ காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நலக்கல்வி கையேடு வழங்கப்பட்டது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுக்குட்பட்ட கெலமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட இருதுகோட்டையில் சுமார் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் நடந்தது.

    இருதுகோட்டை ஊராட்சி தலைவர் சதீஷ்குமார், அனுமந்தபுரம் யசோதாமணி, ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு செய்து சீர்வரிசை வழங்கினார்.

    தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு மற்றும் சத்து மாத்திரைகள், பிரசவ காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நலக்கல்வி கையேடு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவர்கள் சங்கீதா, கோபி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், சுகாதார மேற்பார்வையாளர் சிவகுருநாதன், சுகாதார ஆய்வாளர்கள் ரங்க நாதன், ராமச்சந்திரன், அசோக், சந்தோஷ் மற்றும் செவிலியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×