search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டினம் அருகே  கல்லூரி மாணவியை கடத்தியதாக தருமபுரி வாலிபர் மீது புகார்
    X

    காவேரிப்பட்டினம் அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக தருமபுரி வாலிபர் மீது புகார்

    • வீட்டை விட்டு சென்ற கிரேசி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • பல்வேறு இடங்களில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள நாசன்கால் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மகள் கிரேசி (வயது 19).

    இவர் தருமபுரியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். கடந்த 15-ந்தேதி வீட்டை விட்டு சென்ற கிரேசி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பற்றி பல்வேறு இடங்களில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் காவேரிப்பட்டினம் போலீசில் மாது கொடுத்த புகாரின் பேரில் தனது மகளை தருமபுரி அருகேயுள்ள எட்டியானூரை சேர்ந்த ஜெயராமன் என்ற வாலிபர் கடத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×