search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணம் அருகே  அரசு பஸ் மோதி பெண் பலி
    X

    காவேரிப்பட்டணம் அருகே அரசு பஸ் மோதி பெண் பலி

    • பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே மங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள இளங்களபட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னமுருகன். இவரது மனைவி மங்கம்மாள் (வயது 49). இவரது மகன் முருகேசன். இந்த நிலையில் நேற்று முருகேசன், மங்கம்மாள் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது காவேரிப் பட்டணம் அடுத்த சுண்டே குப்பம் பகுதியில் வந்த போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே மங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து காவேரிப் பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×