என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகே கணவனை கொன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்
- கணவன்-மனைவி இருவ ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- கணவர் ரங்க–சாமியை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகு–தியைச் சேர்ந்தவர் ரங்க–சாமி. இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி. இவர் சற்று மனநலம் பாதிக்கப் பட்டவர். இவர்களுக்கு சந்தோஷ் (வயது19) என்ற மகனும், துர்கா (14) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று சந்தோஷ் வேலைக்காக வெளியே சென்று விட்டார். அப்போது கணவன்-மனைவி இருவ ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் இவரது மகள் துர்கா தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்ட–போது, ஆத்திரமடைந்த ஜெயந்தி தன் கணவர் ரங்கசாமியை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் ஜெயந்தி நடமாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயந்தியின் மகள் துர்கா அப்பா எங்கே என்று கேட்டார். அதற்கு ஜெயந்தி தனது மகளிடம் பதில் ஏதும் சொல்லாமல் இருந்து வந்தார். திடீரென்று அவர் வீட்டின் அருகே இருந்த 60 அடி கிணற்றில் குதித்தார்
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த துர்கா சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஜெயந்தியை மீட்ப–தற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரங்கசாமி பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து துர்கா காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரங்கசாமி, அவரது மனைவி ஜெயந்தி ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரி–சோதனைக்காக காவேரிப்–பட்டணம் அரசு மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவேரிப்–பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயந்தி நேற்று இரவு நடந்த தகராறில் ஆத்தி–ரத்தில் அவரது கணவர் ரங்க–சாமியை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, மறுநாள் காலையில் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை கொன்று விட்டு மனநலம் பாதிக்க ட்ட பெண் தானும் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பர–பரப்பை ஏற்படுத்தி யுள்ளது.






