என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்திகுப்பம் அருகே மூச்சுதிணறல் பிரச்சினையால் 8 மாத கர்ப்பிணி பெண் சாவு
- நேற்று மீண்டும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
- போகும் வழியிலேயே மூச்சுதிணறல் ஏற்பட்டு வெண்மதி பரிதாபமாக உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள குருவிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திருமால். இவரது மனைவி வெண்மதி (வயது38). 8 மாத கர்ப்பிணியான இவருக்கு மூச்சுதிணறல் பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து நேற்று மீண்டும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரை குடும்பத்தினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது போகும் வழியிலேயே மூச்சுதிணறல் ஏற்பட்டு வெண்மதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






