search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இண்டூர் அருகே  சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
    X

    இண்டூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

    • சிறுமியை கடத்திய வாலிபர் போலீசில் சிக்கினார்.
    • ஆனந்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    நல்லம்பள்ளி,

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகேயுள்ள கும்பலவாடி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன். இவரது 18 வயது மகள் வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து எல்லப்பன் இண்டூர் போலீசில் எனது மகளை அதே ஊரை சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கிரஷர் தொழிலாளியான ஆனந்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் சிறுமியை மீட்ட போலீசார் ஆனந்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×