என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே குழந்தையுடன் பெண் மாயம்
- அவர்களை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
- அவர்களை கேரளா மாநிலம், கோழிக்காடு பகுதியை சேர்ந்த முகமது ரபிக் (31) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கூறியிருந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள பாயப்பாதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜான்கிங்ஸ்லி (வயது36). இவரது மனைவி எலிசபெத் (30). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அன்று எலிசபெத் தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர்கள் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து ஜான்கிங்ஸ்லி ஓசூர் அட்கோ போலீசில் எனது மனைவி, மகன் ஆகியோைர கேரளா மாநிலம், கோழிக்காடு பகுதியை சேர்ந்த முகமது ரபிக் (31) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






