search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே   வேனில் கடத்திய ரூ.2.87 லட்சம்  புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    ஓசூர் அருகே வேனில் கடத்திய ரூ.2.87 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • வாகனத்துடன் சேர்த்து ரூ.2,87,500 மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
    • 2 பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டமோசூர் சிப்காட் போலீஸ் சரகம் ஜூஜூவாடி செக்போஸ்ட் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு வேனை போலீசார் நிறுத்தினர்.

    அப்போது வேனில் இருந்தவர்களில் 5 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசாரிடம் 2 பேர் மட்டும் சிக்கினர்.

    அந்த வேனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. பெங்களூரு விலிருந்து சேலத்துக்கு அதனை கடத்தி சென்றது தெரியவந்தது.

    வாகனத்துடன் சேர்த்து ரூ.2,87,500 மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் தங்களிடம் பிடிப்பட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (35),தமிழரசன்(39) ஆகிய 2 போரையும் கைது செய்தனர்.

    தலைமறைவான தசரதன் (எ) ராம்தேவ், யாசீர்கான், மணி, ரவி, லிங்கம் ஆகிய 5 போரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×