என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே மனைவிக்கு திதி கொடுத்துவிட்டு திரும்பிய கணவர் லாரி மோதி பலி
- முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்துவிட்டார்.
- கிருஷ்ணனின் இருசக்கரவாகனம் அந்த லாரி மீது வேகமாக மோதியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள நல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 75). மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
தற்போது நல்லூரில் தனது மகனுடன் வசித்து வந்தார். இவரது மனைவி கடந்த 3 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு திதி கொடுப்பதற்காக கிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
காரியத்தை முடித்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். பெரியாம்பட்டி சமத்துவ புரம் அருகே கிருஷ்ணன் சென்றபோது அவருக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்துவிட்டார்.
இதனால் கிருஷ்ணனின் இருசக்கரவாகனம் அந்த லாரி மீது வேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






