search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே - குண்டும் குழியுமான  சாலையால் மாணவர்கள் அவதி
    X

    எஸ்.ஒகையூரில் இருந்து புக்கிரவாரி செல்லும் தார் சாலையை படத்தில் காணலாம்.

    தியாகதுருகம் அருகே - குண்டும் குழியுமான சாலையால் மாணவர்கள் அவதி

    • தியாகதுருகம் அருகே குண்டும் குழியுமான சாலையால் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.
    • தார் சாலை சுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் இருந்து புக்கிரவாரி செல்லும் சாலை உள்ளது.இந்த தார் சாலை சுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்நிலையில் இந்த தார்சாலை தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் உடையார்பாளையம், உச்சி மணக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எஸ்.ஒகையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் சாலை வழியாக சைக்கிளில் வரும்பொழுது அவ்வப்போது கீழே விழுகிறது.

    மேலும் இந்தப் பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் விளைபொருட்களை விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் புக்கிரவாரி ரயில் நிலையத்திற்கு எடுத்துச் சென்று அங்கிருந்து தலைவாசல் காய்கறி சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இவ்வாறு விவசாயிகள் விளை பொருளை இரு சக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லும் போது ஜல்லிகள் பெயர்ந்து போன குண்டும், குழியுமான சாலையில் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×