search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி அருகே  2 லாரிகள் தீயில் கருகி நாசமானது எப்படி?
    X

    2 லாரிகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளதை காணலாம்.

    தருமபுரி அருகே 2 லாரிகள் தீயில் கருகி நாசமானது எப்படி?

    • திடீரென லாரியில் வெடிச்சத்தம் ஒன்று கேட்டு உள்ளது.
    • டீசல் டேங்க் வெடித்து, தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பென்னாகரம் மேம்பாலம் அருகே பச்சையப்பன் என்பவர் லாரி பட்டறை வைத்துள்ளார்.

    இந்த பட்டறையில் தருமபுரியை சேர்ந்த மணி என்பவர் லாரியை பழுது பார்க்க விட்டுள்ளனர்.

    ஆனால் லாரி பழுது நீக்கியும், எடுக்க வரவில்லை. இதனால் லாரி பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து திருநெல்வேலிக்கு சௌகர் நந்தகுமார் என்பவர் ஊறுகாய் பாரம் ஏற்றி வந்த லாரியை எடுத்து வந்துள்ளார்.

    அப்பொழுது தருமபுரி அருகே வந்த பொழுது செலவுக்கு பணம் தேவை என்பதால், ஏ.டி.எம். செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் இருந்த லாரி பட்டறையில் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்துள்ளார். அப்பொழுது திடீரென லாரியில் வெடிச்சத்தம் ஒன்று கேட்டு உள்ளது. இதனை அறிந்த லாரி ஓட்டுநர் டயர் வெடித்ததோ என்று அச்சத்தில் பார்த்துள்ளார். ஆனால் டீசல் டேங்க் வெடித்து, தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. தீ அருகில் இருந்த லாரி மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பரவி மளமளவென எரிய தொடங்கியது. இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் தருமபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அருகில் பழுது பார்க்க வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி முழுவதுமாக எரிந்து சேதம் ஆனது. மேலும் ஊறுகாய் பாரம் ஏற்றி வந்த லாரி பாதி எரிந்து சேதம் ஆனது. இந்த தீ விபத்தில், சுமார் 50 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த தீ விபத்து குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×