என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே சரக்கு வாகனத்தில் குட்கா கடத்திய 2 பேர் கைது
- சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.
- மேலும் மதுபானம், லாரியை பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் காமன்தொட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட ஆயிரத்து 849 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது.
மேலும் மதுபானம், லாரியை பறிமுதல் செய்யப்பட்டது.
குட்கா கடத்திய பெங்களூரை சேர்ந்த சிவன்னசெட்டி (வயது38), பிரதீபா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






