என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமல்பட்டி அருகே  ரெயில்வே பாலத்தின் அடியில்  பிணமாக கிடந்த ஆண் யார்?
    X

    சாமல்பட்டி அருகே ரெயில்வே பாலத்தின் அடியில் பிணமாக கிடந்த ஆண் யார்?

    • பாலத்தின் அடியில் சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார்.
    • பிணமாக கிடந்த ஆண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த விபரமும் தெரியவில்லை.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்துள்ள ராமகிருஷ்ணபதி பகுதியில் 5 கண் ரெயில்வே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக ெசன்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி சாமல்பட்டி போலீசாருக்கும், சேலம் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். பாலத்தின் அடியில் பிணமாக கிடந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரெயில்ேவ போலீசார் விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்த ஆண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த விபரமும் தெரியவில்லை.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×