என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே  டிப்பர் லாரி மோதி வாலிபர் சாவு
    X

    போச்சம்பள்ளி அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் சாவு

    • அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கிருபாகரன் உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னபாரண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது18), ஒட்டத்தெரு பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (19). இவர்கள் இருவரும் நேற்று கரடியூர் பொன்னியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கிருபாகரன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×