என் மலர்
உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
- 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
- கணவன் திருப்பதிக்கும் அவருடைய உறவுக்காரப் பெண்ணுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பழனிஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி வயது (22), இவரின் உறவுக்கார பெண்ணான வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஜோதிகா வயது (22), ஆகிய இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜோதிகாவுக்கு அடிக்கடி கருகலைப்பு ஏற்பட்டு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையால் கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அதே போல் கணவன் திருப்பதிக்கும் அவருடைய உறவுக்காரப் பெண்ணுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
இதனால் மன விரக்தியடைந்த ஜோதிகா இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போச்சம்பள்ளி போலீஸாருக்கு அக்கம், பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் போலீஸார் விரைந்து சென்று ஜோதிகாவின் உடலை கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கிருஷ்ணகிரி கோட்டாட்சியாருக்கு விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.






