என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாகலூர் அருகே  அரசுப்பள்ளி ஊழியரை தாக்கிய தலைமையாசிரியர் சஸ்பெண்டு
    X

    பாகலூர் அருகே அரசுப்பள்ளி ஊழியரை தாக்கிய தலைமையாசிரியர் சஸ்பெண்டு

    • கடந்த 22-ந் தேதி, அலுவலக பணி சம்பந்தமாக பள்ளியின் தலைமையாசிரியர் அன்னையப்பா என்பவர் பொன்னம்பலத்திடம் தகராறு செய்துள்ளார்.
    • தலைமையாசிரியர் அன்னையப்பாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் தாலுக்கா, பாகலூர் அருகே தேவீரப் பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக இருந்து வருபவர் பொன்னம்பலம்.

    கடந்த 22-ந் தேதி, அலுவலக பணி சம்பந்தமாக பள்ளியின் தலைமையாசிரியர் அன்னையப்பா என்பவர் பொன்னம்பலத்திடம் தகராறு செய்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், தாக்கி காயப்படுத்தினராம்.

    இந்த சம்பவம் குறித்து பொன்னம்பலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு புகார் அனுப்பினார்.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன், மாவட்ட கல்வித்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாவதி ஆகியோர் பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணைக்கு பின்னர் தலைமையாசிரியர் அன்னையப்பாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

    Next Story
    ×