என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம்
- அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
- முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழிற்பழகுனர் இடங்களை தேர்வு செய்து உதவித்தொகையுடன் தொழிற்பழகுனர் பயிற்சி பெற்று பயனடையலாம்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழகுனர் இடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு வருகிற 9-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழிற்பழகுனர் இடங்களை தேர்வு செய்து உதவித்தொகையுடன் தொழிற்பழகுனர் பயிற்சி பெற்று பயனடையலாம். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
எனவே, இது நாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி முடிக்காத, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவர்கள் அனைவரும் தங்களது அனைத்து உண்மை சான்றுகள் மற்றும் சுய விவரத்துடன் (பயோடேட்டாவுடன்) தொழிற்பழகுநர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.






