search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சில்லரைப்புரவு ஊராட்சியில் தேசிய காசநோய் விழிப்புணர்வு, மருத்துவ முகாம்
    X

    சில்லரைப்புரவு ஊராட்சியில் தேசிய காசநோய் விழிப்புணர்வு, மருத்துவ முகாம்

    • தேசிய காசநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் சில்லரைப்புரவு ஊராட்சியில் நடைபெற்றது.
    • மருத்துவ பரிசோதனைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவனை மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே சில்லரைப்புரவு ஊராட்சியில் தேசிய காசநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. சில்லரைப்புரவு ஊராட்சி மன்ற தலைவர் நா.குமார் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட கல்வியாளர் மாரிமுத்துசாமி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறிய, எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவனை மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு காசநோய் பரிசோதனையை செய்து கொண்டனர்.

    முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் முத்துலெட்சுமி, வார்டு உறுப்பினர்கள் மகேஸ்வரி, பார்வதி, கணேசன், தங்க மாரியப்பன், தாமரைச் செல்வன்,முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் முருகராஜ் மற்றும் மாரிமுத்து, அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கிராம சுகாதார செவிலியர், இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் செண்பக ராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×