search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்
    X

    தேசியக்கொடி ஊர்வலத்தை திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கி வைத்தார்.

    திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்

    • ஓதுவாமூர்த்திகள் கோளறு பதிகமும், மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினர்.
    • பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் 14-ம் நூற்றாண்டில் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்ட திருவா வடுதுறை ஆதீனம் உள்ளது. ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் கோளறு பதிகம் பாடி, முதல்பிரதமரான நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோலே அடையா ளப்படுத்தியது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு ஓதுவாமூர்த்திகள் கோளறு பதிகமும், மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினர். திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சுதந்திர தின வாழத்துகளை கூறினார்.

    திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதற்கான செங்கோலை மவுண்ட் பேட்டன் பிரவுவிடமிருந்து பெற்று நேருவிடம் அளித்தபோது செங்கோல் வைத்துக்கொண்டு நேரு வுடன் கட்டளைத் தம்பிரான் சடைச்சாமி என்கிற குமாரசாமி தம்பிரான் எடுத்துக்கொண்ட புகைப்பட கல்வெட்டை திருவாவடுதுறை ஆதீனம் திறந்து வைத்தார். பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஆதீனம் சார்பில் 1500 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடியை ஆதீனம் முன்னிலையில் பொதுமக்கள், மாணவ மாணவிகள் கைகளில் உயர்த்தி பிடித்து "வந்தே மாதரம்" என வீரமுழக்கமிட்டு ஊர்வலமாக சென்றது காண்போருக்கு சுதந்திரத்தின் பெருமையை அடையாளப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்ச்சியில் ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×