என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி, மகன் இறந்த துக்கத்தில் கூலிதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
    X

    மனைவி, மகன் இறந்த துக்கத்தில் கூலிதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    • மனைவி விஜயா மற்றும் மகன் ராஜேஷ் ஆகிய இருவரும் இறந்து விட்டனர்.
    • கடந்த சில மாதங்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர், பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 50). கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி விஜயா மற்றும் மகன் ராஜேஷ் ஆகிய இருவரும் இறந்து விட்டனர். இதனால் குணசேகரன் மட்டும் தனியாக வசித்து வந்தார். மனைவி மற்றும் மகன் இறந்து விட்டதால், குணசேகரன் கடந்த சில மாதங்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வீட்டில் விரக்தியில் தனிமையாக இருந்த குணசேகரன், விஷத்தை குடித்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி குணசேகரன் உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×