என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாளை முதல் நாமக்கல் - ராமேசுவரம் சிறப்பு ெரயில் இயக்கம்
- கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை களில் காலை 6.30 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் இரவு 8.45 மணிக்கு நாமக்கல்லை வந்தடைகிறது.
- அதிக அளவில் பயணிகள் ஏறும்பட்சத்தில், ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ெரயில் நிரந்தர ெரயிலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
நாமக்கல்:
கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை களில் காலை 6.30 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் இரவு 8.45 மணிக்கு நாமக்கல்லை வந்தடைகிறது. அதன்பிறகு மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடைகிறது.
மீண்டும் ஞாயிற்றுக்கி ழமை இரவு 9 மணிக்கு ராமேசுவரத்தில் புறப்ப டும் ெரயில் மறுநாள் (திங்கள்கிழமை)அதி காலை 4.20 மணிக்கு நாமக்கல்லுக்கு வந்து சேருகிறது. அதன்பிறகு, சேலம், பெங்களூரு வழியாக அன்று இரவு 7.25 மணிக்கு ஹூப்ளியைச் சென்றடைகிறது.
விடுமுறை நாளில் இயக்கப்படும் இந்த ராமேசுவரம் சிறப்பு ெரயிலை நாமக்கல் மாவட்ட பொதுமக்கள், பக்தா்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதிக அளவில் பயணிகள் ஏறும்பட்சத்தில், ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ெரயில் நிரந்தர ெரயிலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது என நாமக்கல் மாவட்ட ெரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் அறிவுறுத்தி உள்ளனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்