என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.டி.எம் எந்திரத்தில் விட்டுச்சென்ற ரூ.20 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு
    X

    பணத்தை பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்த போது எடுத்த படம்.

    ஏ.டி.எம் எந்திரத்தில் விட்டுச்சென்ற ரூ.20 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு

    • வங்கிக்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளனர்.
    • ரூ.20 ஆயிரம் இருந்துள்ளது.

    பரமத்திவேலூர்;

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் அரசு (வயது 17). இவர் பரமத்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது உறவி னர் அதே ஊரைச் சேர்ந்த நவீன் (22). இவர் கல்லூரி படிப்பை முடித்து தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் நேற்று பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள அரசுடமையாக்கப் பட்ட வங்கிக்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ள னர். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதை பார்த்துள்ளனர்.

    அந்த பணத்தை எடுத்து பார்த்தபோது, அதில் ரூ.20 ஆயிரம் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பணத்தை வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி யிடம் இருவரும் ஒப்படைத்த னர்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் விட்டு செல்லப்பட்ட ரூ.20 ஆயிரத்தை பொறுப்பாக போலீசிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர் அரசு மற்றும் நவீன் ஆகியோரின் நேர்மையை இன்ஸ்பெக்டர் இந்திராணி பாராட்டினார்.

    ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க வந்தவர், பணம் உடனே வராததால் பணம் வரவில்லை என நினைத்து ஏ.டி.எம் கார்டை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டதும், அதன் பிறகு அங்கு பணம் எடுப்பதற்காக வந்த மாணவர், அந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    Next Story
    ×