சேலத்தில் பரபரப்பு 10 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு

நஞ்சப்பன் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த10 ஆடுகளை மர்ம விலங்குகள் கழுத்து வயிறு தொடை பகுதிகளில் கடித்தது. இதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
Published on

சேலம்:

சேலம் அழகாபுரம் லட்சுமிபுரம் கணபதி நகர் பகுதியில் நஞ்சப்பன் என்பவர் ஆடு மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த பகுதி நகர மலை அடிவாரம் ஒட்டி இருக்கக்கூடிய பகுதியாகும். இந்த நிலையில் நேற்று இரவு நஞ்சப்பன் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த10 ஆடுகளை மர்ம விலங்குகள் கழுத்து வயிறு தொடை பகுதிகளில் கடித்தது. இதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

காலையில் ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்த நஞ்சப்பன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆடுகளை கடித்த விலங்கு என்ன? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மர்ம விலங்கு நடமாட்டத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com