search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அருகே இளம்பெண்ணிடம் செயின் பறித்த மர்ம நபர்கள்
    X

    கோப்பு படம்.

    நிலக்கோட்டை அருகே இளம்பெண்ணிடம் செயின் பறித்த மர்ம நபர்கள்

    • திரவியம் நகர் அருகே பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுமித்ரா கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
    • அவர் சத்தம் போட்டபோதும் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி மனைவி சுமித்ரா (வயது 32). இவர் தனது உறவினர் ரமேஷ் என்பவருடன் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு பட்டா மாறுதலுக்கு மனு அளிக்க வந்தார். பின்னர் அவர்கள் அணைப்பட்டி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தனர்.

    திரவியம் நகர் அருகே பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுமித்ரா கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அவர் சத்தம் போட்டபோதும் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×