என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் நகராட்சி கூட்டம்
    X

    கிருஷ்ணகிரியில் நகராட்சி கூட்டம்

    • நகராட்சி பகுதியில் பழுதடைந்துள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டுகளை சீரமைக்க அனுமதி கூறப்பட்டது.
    • புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர் பலகை ஸ்டீல் பைப் கொண்டு வடிவமைப்புகேற்ப அமைப்பது குறித்து கூறப்பட்டது.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் வசந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி நகராட்சி வார்டு எண் 25-ல், தவுலதாபாத் பகுதியில் உள்ள நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், சந்தைப்பேட்டை மார்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன், கூடுதல் பள்ளிக் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கவும், கூடுதல் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு 100 சதவீதம் அரசு நிதியுதவி பெற நகராட்சி நிர்வாக இயக்குனரை கேட்டுக்கொள்வது.

    கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் விடுபட்டுள்ள சாலைகள் மற்றும் தெருக்கள், புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர் பலகை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப் கொண்டு வடிவமைப்புகேற்ப அமைப்பது.

    மேலும் நகராட்சி பகுதியில் பழுதடைந்துள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டுகளை சீரமைக்க அனுமதி வழங்குவது என்பது உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில், நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள், மற்றும் நகராட்சி உதவி பொறியாளர் அறிவழகன், இளநிலை பொறியாளர் செந்தில்குமரன், துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர்கள் ரமணசரண், உதயகுமார், மாதேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் லூகாஸ், மேலாளர் நாகூர்மீரான்ஒலி மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×