என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளுக்கே சென்று வரி வசூல் செய்யும் நகராட்சி ஊழியர்கள்
    X

    கொடைக்கானலில் வீடுகளுக்கே சென்று வரி வசூலிக்கும் நகராட்சி ஊழியர்கள்.

    வீடுகளுக்கே சென்று வரி வசூல் செய்யும் நகராட்சி ஊழியர்கள்

    • நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வரி வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    • இதனால் மக்களின் அலைச்சல் குறைவதோடு வரி இனங்களும் விரைவில் வசூலாவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட வரி இனங்களை முறையாக செலுத்தும்படி தொடர்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஆனால் ஒரு சிலர் வரி பாக்கி செலுத்தவில்லை. மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத சூழல் இருந்து வருகிறது.

    இதனையடுத்து நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வரி வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் மக்களின் அலைச்சல் குறைவதோடு வரி இனங்களும் விரைவில் வசூலாவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×