என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம்
    X

    தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம்

    • கூட்டத்தில் முன்னதாக வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.
    • இக்கூட்டம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.

    தேன்கனிக்கோட்டை

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில், சாதாரண மன்ற கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் முன்னதாக வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து (1.35 கோடி மதிப்பில் புதிதாக பேரூராட்சிக்கு அலுவலகம் கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்பட்டு உள்ளதாகவும், கோடையில் 18 வார்டுகளில் சீரான குடிநீர் வினியோகம், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஏக மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக்கூட்டம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார். உடன் மன்ற உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×