என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
138 அடியை நெருங்கிய முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்
- கேரளா மற்றும் மேற்குெதாடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், நீர்நிலைகள் நிரம்பி விட்டன.
- விரைவில் 138 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடலூர்:
கேரளா மற்றும் மேற்குெதாடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், நீர்நிலைகள் நிரம்பி விட்டன. மேலும் முல்லைபெரியாறு, வைகையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் இன்று காலை 137.50 அடியாக உள்ளது. விரைவில் 138 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 142 அடிவரை தண்ணீர் தேக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அணைக்கு 2143 கனஅடிநீர் வருகிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகைஅணையின் நீர்மட்டம் 70.69 அடியாக உள்ளது. 2485 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2569 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 368 கனஅடிநீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 72 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 14.4, தேக்கடி 5.8, உத்தமபாளையம் 1.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்