search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணத்தில் மொகரம் திருவிழா
    X

    காவேரிப்பட்டணத்தில் மொகரம் திருவிழா

    • இளைஞர்கள் கோல் சண்டை, கத்தி சண்டை, புலிவேடம் கரி வேடம், ஆகியவைகளை அணிந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • இந்நிகழ்ச்சிகளை மேல் மக்கான் சின்ன மக்கான், கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    காவேரிப்பட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் மேல் மக்கான் சின்ன மக்கான் மொகரம் திருவிழா கடந்த 150 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    மேல் மக்கான் முதல் நாள் நிகழ்ச்சியாக குண்டம் நிகழ்ச்சியும், இன்னிசை கச்சேரி மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிறைவு நாளான நேற்று மாலை 5 மணி அளவில் மேல் மக்கான் அல்லா சாமியும், கீழ் மக்கான் அல்லா சாமியும், தேசிசெட்டி தெருவில் கூடின. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து சாமியை வழிபட்டனர்.

    மேலும் அல்லாஹ்வின் மீது மிளகு, முத்து கொட்டை, உப்பு அல்லா சாமி மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    மேலும் இஸ்லாமிய இளைஞர்கள் அல்லாசாமி முன்பு இஸ்லாமிய இளைஞர்கள் கோல் சண்டை, கத்தி சண்டை, புலிவேடம் கரி வேடம், ஆகியவைகளை அணிந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சிகளை மேல் மக்கான் சின்ன மக்கான், கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் நகர செயலாளர் பாபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சாஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் பாலாஜி ரமணன் தலைமையில் காவேரிப்பட்டணம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

    Next Story
    ×