search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா
    X

    பூண்டி மாதா.

    பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா

    • பூ அன்னையின் பிறப்பு பெருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.
    • கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம்.

    பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று பக்தர்களால் புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.

    வரும் 30 ஆம் தேதி புதன்கிழமை அன்னையின் பிறப்பு பெருவிழா தொடக்கமாக கொடியேற்று நிகழ்வு நடைபெறுகிறது .அன்னையின் உருவம் வரையப்பட்ட திருக்கொ டியை பக்தர்கள் பக்தி பெருக்கோடு எடுத்து வந்து கோவிலின் முன்புறமுள்ள கொடி மரத்தில் ஏற்றப்படும்.

    இந்த நிகழ்வில் கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் கலந்து கொண்டு அன்னையின் பிறப்பு பெருவிழா தொடக்கமாக கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    திருப்பலியில் கும்பகோ ணம் பிஷப் அந்தோனி சாமியுடன், பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ் ,தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் ,உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீகத் தந்தை அருளானந்தம் மற்றும் பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றி வைக்கின்றனர்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    வரும் 31ஆம் தேதி மரியா -இறை நம்பிக்கையின் நங்கூரம் என்ற தலைப்பில் அரிமளம் பங்கு தந்தை தஞ்சை டோமி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    செப்டம்பர் மாதம் 1ம் தேதி மரியா- சீடத்துவத்தின் அடையாளம் என்ற தலைப்பில் திருச்சி புதிய வளனார் கல்லூரி அதிபர் பவுல்ராஜ் திருப்பலி நிறைவேற்றுகிறார். செப்டம்பர் 2ம்தேதி மரியா-மனிதநேயத்தின் உச்சம் என்ற தலைப்பில் திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரி அதிபர் ஆன்ட்ரூ டி ரோஸ் , செப்டம்பர் 3தேதி மாலை மரியா -உதவுவதில் முன்னோடி என்ற தலைப்பில் கும்பகோணம் கல்வி மற்றும்திட்டப்பணி குழு செயலாளர் கஸ்பார், செப்டம்பர் 4ம் தேதி மரியா -ஆறுதலின் ஊற்று என்ற தலைப்பில் திருச்சி மறை மாவட்ட பொருளாளர் ஜேம்ஸ் செல்வநாதன், செப்டம்பர் 5ஆம் தேதி மரியா -மனவலிமையின் முன்மாதிரி என்ற பொருளில் திருச்சிலுவை சபை தமிழக மறை மாநில தலைவர் ஜோசப் கஸ்பார், 6ம் தேதி மரியா- முன்னெடுப்பின் உதாரணம் என்ற தலைப்பில் அம்மாபேட்டை பங்குத்த ந்தைஜோஜோ லாரன்ஸ்,

    செப்டம்பர் 7ஆம் தேதி மரியா -ஒற்றுமையின் வழிகாட்டி என்ற பொருளில் கும்பகோணம் மறை வட்ட முதன்மை குரு பிலோமின்தாஸ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்று கின்றனர்.

    அதனை தொடர்ந்து அன்னையின் பிறப்பு நாளாக கருதப்படும் செப்டம்பர் மாதம் 8 தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலியை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் நிறைவேற்றி, இரவு 8:30 மணி அளவில் அன்னையின் பிறப்பு பெருவிழா தேர்பவனியை தொடங்கி வைக்கிறார். மறுநாள் செப்டம்பர் 9-ம் தேதி காலை திருவிழா திருப்பலிநிறை வேற்றுவதுடன் பூண்டி மாதா திருத்தல பேராலயத்தின் அன்னையின் பிறப்பு பெருவிழா நிகழ்வுகள் நிறைவு பெறுகின்றன. அன்னையின் பிறப்பு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ்,தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×