search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரண்டாவது திருமணம் செய்ததாக அவதூறு பரப்பும் தாய்-தந்தை : நடவடிக்கை எடுக்க  இளம்பெண் புகார்
    X

    கவிதா

    இரண்டாவது திருமணம் செய்ததாக அவதூறு பரப்பும் தாய்-தந்தை : நடவடிக்கை எடுக்க இளம்பெண் புகார்

    • எனது பெற்றோர் மற்றும் எனது சகோதரர்கள் என்னை தொந் தரவு செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தனர்.
    • என்னை பற்றி தவறான தகவல்களை அவதூறாக சமூகவலை தளங்களில் பரப்பி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கெங்கு செட்டிபட்டியை சேர்ந்த கமலேசன் மகள் கவிதா (வயது 25). எம்.காம் பட்டதாரி.

    இவர் தருமபுரி எஸ்.பி. கலைசெல்வனிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் காரிமங்கலம் அருகே கெங்கு செட்டிபட்டியில் எனது பெற்றோர் கமலேசன், மஞ்சுளாவுடன் வசித்து வந்தேன்.

    எனது அக்கா சத்யாவிற்கும், எனது அத்தை மகனுக்கும் இடையே நடந்த விருப்ப மில்லாத திருமணத்தால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு நான்தான் காரணம் என எனது பெற்றோர் மற்றும் எனது சகோதரர்கள் என்னை தொந் தரவு செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதனால் கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி நான் எனது வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறேன்.

    இந்த நிலையில், எனது உறவினர்களே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக என்னை பற்றி தவறான தகவல்களை அவதூறாக சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

    எனவே மனஉளைச்சலில் இருக்கும் எனக்கு உயிர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×