என் மலர்
உள்ளூர் செய்திகள்

மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம்
- ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- ஒன்றிய குழு தலைவர் இ.டி.டி.சுமதி செங்கண்ணன் தலைமை வகித்தார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம்,மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் இ.டி.டி.சுமதி செங்கண்ணன் தலைமை வகித்தார்.
ஒன்றிய குழு துணை தலைவர் சி.வன்னிய பெருமாள்,வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் லோகநாதன் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணியில் குறித்து ஆய்வு செய்யப்பட்டு பணிகள் விரைவாக முடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒன்றிய குழு உறுப்பினர்கள் சசிகுமார், முனியம்மாள் நந்தி குமார்,கோமதி செல்வராஜ்,மாது ராஜலிங்கம்,அம்பிகா கிருஷ்ண மூர்த்தி, பழனியம்மாள் ரவி, நாராயணன்,சுதா தர்மன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பணி மேற்பார்வையாளர் இன்பசேகரன் நன்றி கூறினார்.






