search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிசை வீடு எரிந்து சேதமடைந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி- எம்.எல்.ஏ வழங்கினார்
    X

    வீட்டை இழந்த முத்துலட்சுமிக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ நிவாரண உதவி வழங்கினார்.

    குடிசை வீடு எரிந்து சேதமடைந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி- எம்.எல்.ஏ வழங்கினார்

    • தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எரிந்து சாம்பலாயின.
    • தீ விபத்தில் வீட்டை இழந்த ரவிச்சந்திரன் மனைவி முத்துலட்சுமியிடம் நிவாரண உதவி வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே தற்காஸ் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவரின் குடிசை வீடு, வீட்டிற்குள் உள்ள மின் வயரிலிருந்து கசிந்த மின்சாரத்தால் தீப்பொறி வெளியேறி கூரையில் பட்டு தீப்பிடித்து எரிந்து சாம்பல் ஆனது.

    குடிசை வீடு எரிந்து சேதமடைந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி- எம்.எல்.ஏ வழங்கினார்தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எரிந்து சாம்பலாயின.

    இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தற்காஸ் கிராமத்துக்கு நேரில் வந்து தீ விபத்தில் வீட்டை இழந்த ரவிச்சந்திரன் மனைவி முத்துலட்சுமியிடம் நிவாரண உதவி வழங்கினார்.

    சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், வி.ஏ.ஓ. பவளச்சந்திரன்,வருவாய் ஆய்வாளர் மருதுபாண்டி யன், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×