search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே வீட்ைட விட்டு சென்ற சிறுமி மாயம்
    X

    சின்னசேலம் அருகே வீட்ைட விட்டு சென்ற சிறுமி மாயம்

    • சின்னசேலம் அருகே வீட்ைட விட்டு சென்ற சிறுமி மாயமானார்.
    • 5 .30 மணிக்கு எழுந்து அப்பா செல்லமுத்துவிடம் பாத்ரூம் சென்று விட்டு வருகிறேன் என்று கூறி சென்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் மேலூர் கிராமம் அருகே கீழ்பூண்டியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் வழக்கம் போல் இரவு வீட்டில் தூங்கினார். பின்னர் அதிகாலை 5 .30 மணிக்கு எழுந்து அப்பா செல்லமுத்துவிடம் பாத்ரூம் சென்று விட்டு வருகிறேன் என்று கூறி சென்றார்.

    அதன் பின்னர் அந்த சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் செல்லமுத்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் உள்ள இடங்களிலும், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் செல்லமுத்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து மாயமான சிறுமியை சின்னசேலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×