search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி சட்டைநாதர் கோவிலில் அமைச்சர் ஆய்வு
    X

    சீர்காழி சட்டைநாதர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

    சீர்காழி சட்டைநாதர் கோவிலில் அமைச்சர் ஆய்வு

    • இக்கோவிலில் 30 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இன்று திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 30 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இன்று திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் லலிதா, சீர்காழி கோவில் கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான், மாவட்ட செயலாளர் நிவேதா.முருகன் எம்.எல்.ஏ , மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ரவி, ஒன்றிய குழு தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், செல்ல சேது ரவிக்குமார், சசிகுமார், மலர்விழி திருமாவளவன், மாவட்ட கவுன்சிலர் விஜயஸ்வரன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துக்கு–பேரன் உடன் இருந்தனர். தொடர்ந்து திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் சுவாமி கோயிலிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×