search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பம் அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில்மகேஷ் ஆய்வு
    X

    அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

    கம்பம் அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில்மகேஷ் ஆய்வு

    • பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தை பார்வையிட்டு மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • பின்னர் பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி லோயர்கேம்ப்பில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார். மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆதிவாசி மாணவ-மாணவிகள் வருகையை ஆய்வு செய்தார்.பின்னர் கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

    அப்போது பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தை பார்வையிட்டு மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அப்போது கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் அமைச்சரிடம் கூடுதல் வகுப்பறைகள் கட்டி தரவேண்டும் என கோரிக்கை வைத்தார். அமைச்சரும் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினர். இதில் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×