search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மினி லாரி மோதி 3 வட மாநில தொழிலாளிகள் பரிதாப சாவு
    X

    மினி லாரி மோதி 3 வட மாநில தொழிலாளிகள் பரிதாப சாவு

    • மினி லாரி ஒன்று, வேகமாக மோதி நிற்காமல் சென்றுவிட்டது.
    • 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப் பள்ளி-ஆனேக்கல் சாலையில் மாயசந்திரா அருகே நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வட மாநில கூலித் தொழிலாளர்கள் 3 பேர் வேலையை முடித்து, சாலையில் நடந்தவாறு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று, இவர்கள் மீது வேகமாக மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அத்திப்பள்ளி போலீசார் அங்கு சென்று உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அத்திப்பள்ளி அரசு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வாகனத்துடன் தலைமறைவாகிவிட்ட மினி லாரி டிரைவரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×