என் மலர்
உள்ளூர் செய்திகள்

நுண்ணுயிர் செயலாக்க மைய பணிகள் தொடக்க விழா
- ஆனந்த நகரில் நுண்ணுயிர் செயலாக்க மைய பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
- ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
தூய்மை பாரத திட்டம் (யு), 2.0 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பில் ஆனந்த நகரில் நுண்ணுயிர் செயலாக்க மைய பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இதில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
மேலும் இதில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் மம்தா சந்தோஷ், மாநகராட்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






