என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்-அசோக்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை
    X

    எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்-அசோக்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை

    • எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாட வேண்டும்.
    • நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 106வது பிறந்தநாள் நாளை (ஜன. 17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சி நிர்வாகிகள், அந்தந்த பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாட வேண்டும்.

    அதுசமயம் லோக்சபா, சட்டசபை உறுப்பினர்களும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×