என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை
- மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
- சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை தபால் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.
இவரது மனைவி லட்சுமி (வயது 41). இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த லட்சுமி சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமணி ஒன்றில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார். இது குறித்து லட்சுமியின் சகோதரர் அஞ்சப்பா கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






