என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.சார்பாக வாக்குசாவடி முகவர்கள்  கூட்டம்
    X

    அ.தி.மு.க.சார்பாக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்

    • கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக் குமார் தலைமை வகித்தார்.
    • வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ,வுமான கே.பி.முனுசாமி கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கொப்பகரை ஊராட்சி, மேடஅக்ரகாரம் ஊராட்சி, தொட்ட மெட்டரை ஊராட்சி லிங்கணம்பட்டி ஆகிய பகுதிகளில் ஊராட்சிகள் வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினரு ம்மான கே.அசோக் குமார் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். ஆய்வுக் கூட்டத்தில் அ.தி.மு.க. துணை பொதுசெயலாளரும் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ,வுமான கே.பி.முனுசாமி கலந்துக்கொண்டு வாக்குசாவடி பூத் வாரியாக பட்டியில் உடன் தேர்தல் பொருப்பாளர்களை நேடியாக ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம், முன்னாள் மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ராஜகோபால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அப்பையன் முனிசாமி, கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்பிரமணி, ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, துணை செயலாளர் முனுசாமி, கூட்டுறவு சங்க இயக்குனர் சீனிவாசன், முன்னால் ஊராட்சி செயலாளர் பெருமாள் பால்னாம்பட்டி ராஜா, கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

    Next Story
    ×