என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக நகர் பணிமனையில், பணிபுரியும் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை போக்குவரத்து கழக தருமபுரி மண்டல பொதுமேலாளர் ஜீவரத்தினம், துணை இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போக்குவரத்து பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

- 5,400 பேருக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
- கண், மூக்கு, தொண்டை உள்பட, 12 வகையான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
தமிழக அரசு போக்குவரத்து பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தருமபுரி மண்டலத்திற்குட்பட்ட, 15 பணிமனைகளில் உள்ள டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர் உள்பட 5,400 பேருக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி கிருஷ்ணகிரி நகர பணிமனையில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. தருமபுரி மண்டல போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஜீவரத்தினம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
பயிற்சி மருத்துவ அலுவலர் விமல், மருத்துவர்கள் சாரதா, ப்ரீத்தி ரென்சி, கோவிந்தராஜ் சுரேஷ் பார்த்திபன் உள்பட, 22 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர், போக்குவரத்து பணியாளர்களுக்கு, ரத்த அழுத்தம், சிறுநீரகம், கண், மூக்கு, தொண்டை உள்பட, 12 வகையான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதில், தருமபுரி மண்டலத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள், 750 பேர் பயனடைவார்கள். நேற்று நடந்த சிறப்பு முகாமில், 250 பணியாளர்கள் தங்கள் உடல்நிலையை பரிசோதித்தனர்.
மீதமுள்ள அனைவருக்கும் மற்றொரு நாளில் முகாம் நடத்தப்படும் எனவும், மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர போக்குவரத்து கழக கிளை மேலாளர் பார்த்திபன், போக்குவரத்து மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, தொழிற்சங்க நிர்வாகிகள் ரவி, சிவகுமார், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
