என் மலர்
உள்ளூர் செய்திகள்

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெறலாம்
- விண்ணப்ப ப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- மாதந்தோறும் உதவித்தொ கையாக ரூ.3500, மருத்து வப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி,
வயது முதிர்ந்த தமிழறி ஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்வளர்ச்சி த்த்துறை உதவி இயக்குநர் பவானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்கத் தகுதியாக 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில் ஆன்லை னில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதாற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்ப ப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொ கையாக ரூ.3500, மருத்து வப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்கநர் அலுவலகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.
நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக ்கொள்ளபட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






