என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
- கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- போதை மற்றும் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பொதுமக்க ளிடையே எடுத்துரைத்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட காவல் காவல் காணிப்பாளார் சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரிலும், மாவட்ட குற்ற பிரிவு டி.எஸ்.பி. சரவணன் (பொ) ஆகியோரின் அறிவுருத்திலின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் பொதுமக்களிடையே கஞ்சா பயன்படுத்துவதால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுத்துவதுடன், ஆண்மை குறைவு, உடல் உறுப்புகள் செயல் இளத்தல் , கண்மங்கலாகுதல் உள்ளிட்ட பல்வேறு தீங்குகள் குறித்து போதை மற்றும் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பொதுமக்க ளிடையே எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்னுசாமி, பிரகாஷ், ஊராட்சி செயலர் வெங்கடேசன், மக்கள் நல பணியாளர் ராஜா மற்றும் பொதுக்கள் கலந்து கொண்டனர்.






