என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பேரணி-புகைப்பட கண்காட்சி
- பேரணியை இன்று காலை மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
- வாகனத்தில் தமிழ்நாடு நாள் குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ஜூலை 18 தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணியை இன்று காலை மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி பெங்களூர் சாலை வழியாக சென்று மாங்கனி வளாகத்தில் தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கிற்கு சென்றது. அப்போது கலெக்டர் சரயு சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்தார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் தமிழ்நாடு நாள் குறித்த புகைப்பட கண்காட்சியையும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அதிநவீன வீடியோ வாகனத்தில் தமிழ்நாடு நாள் குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதையும் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், வருவாய் கோட்டாட்சியர் பாபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகர மன்ற தலைவர் பரிதா நவாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை சீனிவாசன், துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி, வட்டாட்சியர் சம்பத், நகராட்சி அலுவலர்கள், அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்