search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலையில் கல் விழுந்து மேஸ்திரி சாவு
    X

    தலையில் கல் விழுந்து மேஸ்திரி சாவு

    • சிமெண்ட்டு கல் வைத்து கட்டிடம் கட்டும்போது திடீரென்று ஒரு கல் தவறி சின்னசாமி மீது விழுந்தது.
    • கிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முத்துகவுண்டன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது45). கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த 10-ந் தேதி பாலக்கோட்டில் ஒரு கட்டிடத்தில் வேலை செய்தார்.

    அப்போது சிமெண்ட்டுகல் வைத்து கட்டிடம் கட்டும்போது திடீரென்று ஒரு கல் தவறி சின்னசாமி மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் வலியால் அலறி துடித்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×