search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகரித்து வரும் கொரோனா தொற்று - திண்டுக்கல் மாவட்டத்தில் முககவசம் அணிய அறிவுறுத்தல்.
    X

    கோப்பு படம்

    அதிகரித்து வரும் கொரோனா தொற்று - திண்டுக்கல் மாவட்டத்தில் முககவசம் அணிய அறிவுறுத்தல்.

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 3ம் அலைக்குப் பிறகு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

    தினசரி 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அண்டை மாவட்டங்களான கோயம்புத்தூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒரு சில நாட்களாக தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி சராசரியாக 10 நபர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. இந்த நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவதால் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.

    எனவே நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறோம். நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தி கொள்ளாதவர்கள் உரிய நேரத்தில் தங்களது தவணைக்குரிய தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×