என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் மளிகை கடைக்காரர் விபத்தில் பலி
Byமாலை மலர்19 Feb 2023 9:39 AM GMT
- கிருஷ்ணாபுரம் கூட்டு ரோடு அருகே பரமசிவம் சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று அவர் மீது மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம் உயிரிழந்தார்.
மத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம், மேற்குவதனவாடி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.
நேற்று வழக்கம்போல கடை வியாபாரத்தை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி-காவேரிப்பட்டணம் சாலையில் கிருஷ்ணாபுரம் கூட்டு ரோடு அருகே பரமசிவம் சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று அவர் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த பரமசிவத்துக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X