என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திகிரியில் மார்கழி வாசவி மகா உற்சவம்
- ஆர்ய வைசிய சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
- நாள்தோறும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே மத்திகிரியில், 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது.இந்த கோவிலை ஆர்ய வைசிய சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
இந்த கோவிலில்,மார்கழி வாசவி மகா உற்சவம் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி, முக்கோட்டி ஏகாதசி மற்றும் புத்தாண்டு ஆகியவை இந்த ஒருமாத கொண்டாட்ட
ங்களின் முக்கிய நாட்களாகும்.
கோவிலின் ஒரு பகுதியில் இருக்கும் ஸ்ரீஆஞ்சநேய சாமி சன்னிதி, வியாச முனிவரால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தை, கோவில் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஹரிஷ்பாபு, செயலாளர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் பொருளாளர் எஸ். எஸ்.ராஜா மற்றும் நிர்வாகிகள் நிர்வகித்து வருகின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் மார்கழி வாசவி மகா உற்சவத்தில் நாள்தோறும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. மேலும் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.






