search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாங்காய் சீசன் தொடக்கம்
    X

    மாங்காய் சீசன் தொடக்கம்

    • இந்த வருடம் மா விளைச்சல் குறைவு என விவசாயி வேத னையுடன் தெரிவித்தார்.
    • மாமர த்துக்கு செலவு செய்த பணம் கூட கைக்கு வரவில்லை.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு மா மரங்கள் அதிகமாக காணப்படுகிறது.

    தற்போது மாங்காய் சீசன் துவங்கி உள்ள நிலையில் காவேரிப்பட்டணம் மாங்காய் மண்டிகளுக்கு இருசக்கர வாகனம், டாட்டா ஏஸ், டிராக்டர், மாட்டுவண்டி உள்ளிட்ட வாகனங்களில் மாங்காய் மண்டிகளுக்கு விவசாயிகள் எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த வருடம் மா விளைச்சல் குறைவு என விவசாயி வேத னையுடன் தெரிவித்தார். மேலும் அதற்குரிய விலை கிடைக்கவில்லை. மாமர த்துக்கு செலவு செய்த பணம் கூட கைக்கு வரவில்லை என்று வேதனையுடன் தெரிவி த்தார்.

    செந்தூரா, பையண ப்பள்ளி அல்போன்சா, பெங்க ளூரா, நீளம் உள்ளிட்ட மா வகைகள் தற்போது வரத் துவங்கியுள்ளது.

    தற்போது ஒரு கிலோ செந்தூரா -25, பையண பள்ளி -25, அல்போன்சா -45, சக்கரக்குட்டி- 40, நீளம் -25, பெங்களூரா- 20 விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து மா வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் கேசவன் கூறியதாவது கடந்த வருடத்தை ஒப்பிடும் பொழுது இந்த வருடம் மாங்காய் விளைச்சல் 15 சதவீதம் குறைவு.

    கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் ஈரோடு, திருவண்ணாமலை, கோயம்புத்தூர் சென்னை போன்ற இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

    இந்த வருடம் மாங்கூழ் தொழிற்சாலையில் இருந்து இந்த வருடம் எங்களுக்கு ஆர்டர் இதுவரை வரவில்லை. அதனால் மாங்காய் விலை மிகவும் குறைவாக உள்ளது. தற்பொழுது தான் மாங்காய் சீசன் துவங்கி உள்ளது. போகப்போக தான் விலை ஏற்றம் இருக்குமா இல்லையா என்று தெரியவரும் என கூறினார்.

    Next Story
    ×